search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்மாவட்ட ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு
    X

    தென்மாவட்ட ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு

    • பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது.

    மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது. மேலும், வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், திருநெல்வேலி முதல் நாகர் கோவில் வரையும் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இரட்டை ரெயில்பாதை பணி நிறைவு பெறவுள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை-நாகர் கோவில் விரைவு ரெயில், சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரெயில்கள் முன்பை விட முன்னதாக வந்து சேருகின்றன. இந்தப் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் அனைத்து ரெயில்களும் முன்பை விட 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.

    மேலும், செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது. ரெயில்களின் வேக அதிகரிப்பு பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×