என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.2.46 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற ஆசிரியை- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- ஆசிரியை அப்ளிகேஷனில் சென்று 10 ரூபாய் கட்டியுள்ளார்.
- சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணத்தை கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் தனது சகோதரரிடம் ஆன்லைன் மூலமாக மின்கட்டணத்தை கட்ட சொல்லி உள்ளார். அவரது சகோதரரும் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை கட்டியுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை ஆசிரியை திறந்து பார்த்தபோது அதில் நீங்கள் மின்சார கட்டணத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டாததால் இன்று இரவுடன் உங்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மெசேஜ் வந்த நம்பரை ஆசிரியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் உங்கள் வீட்டின் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு அப்ளிகேஷனை அனுப்பி வைக்கிறோம்.
அந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்றார். இதை உண்மை என்று நம்பிய அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை அந்த நபர் கூறியவாறு அப்ளிகேஷனை தனது செல்போனில் டவுன்லோடு செய்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அதில் ரூ.10 கட்டணம் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் சென்று 10 ரூபாய் கட்டியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்தது. அந்த ஓ.டி.பி. நம்பரை ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் பகிர்ந்து உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வந்து கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை கண்டு அந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.
இதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆசிரியை இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நூதன மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
தற்போது தொழில்நுட்ப உதவியால் பல்வேறு நவீன திருட்டுகள், மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் யாரும் முன் பின் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் போனை நம்பி ஏமாற வேண்டாம். அதேபோல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக வரும் விளம்பரங்களை நம்பியும் ஏமாற வேண்டாம்.
தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்களுக்கு போன் செய்து உங்கள் போன் எண்ணை 5ஜி சேவைக்கு மாற்ற வேண்டும்.
உங்கள் பற்றிய விவரங்களை கூறுங்கள் என்று போன் செய்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம் . கடந்த சில நாட்களாக இது போன்ற மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்