search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வினரை தெறிக்க விட்ட சி.வி.சண்முகம்...
    X

    தி.மு.க.வினரை தெறிக்க விட்ட சி.வி.சண்முகம்...

    • விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார்.

    ஆவேசமாக பேசுவதில் அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகத்தை அடிச்சிக்க ஆளே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.

    விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். பேச்சும் சிறப்பாகத்தான் போய் கொண்டிருந்தது. அப்போது ஆ. ராசா இந்துக்களை பற்றி செய்த விமர்சனத்தை ஒருபிடி பிடித்தார்.

    ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். அப்படியானால் இந்துகள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்று இவர் ஒரு கேள்வி எழுப்ப... மேடைக்கு பின்புறத்தில் இருந்து சில தி.மு.க.வினர் பதிலுக்கு ஆவேச குரல் எழுப்ப, மேடையில் பேசிக்கொண்டிருந்த சி.வி. சண்முகமும் ஆவேசத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்.

    மிரட்டல் விடுக்கும் தி.மு.க.வுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம் என்று சவாலை தெறிக்க விட, மேடையின் பின்புறத்தில் நின்று பேசியவர்கள் ஓடி விட்டனர். தொடர்ந்து பேசிய சண்முகம் என்னை மிரட்டலாம், உருட்டலாம்... ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.

    காவல் துறையினரும் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். ஆட்சி மாறும்போது தெரியும் என்று பேச்சு திசை மாறி உச்சத்தில் செல்லவே பொதுக்கூட்டமே பரபரப்பானது.

    Next Story
    ×