search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று அரசியல் சாசனத்தின் முகவுரையை மீண்டும் நினைவுகூர்வோம்- சு.வெங்கடேசன் எம்.பி பதிவு
    X

    இன்று அரசியல் சாசனத்தின் முகவுரையை மீண்டும் நினைவுகூர்வோம்- சு.வெங்கடேசன் எம்.பி பதிவு

    • கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு "மதச்சார்பின்மை" என்ற கோட்பாடு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் முக்கிய விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    இதற்கிடையே, இது ராமர் கோவில் விழா அல்ல அரசியல் விழா, பாஜக அரசு விழா என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் அரசியல் சாசனம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உயிருள்ள உடலுக்கு மூச்சுக்காற்று போல இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு "மதச்சார்பின்மை" என்ற கோட்பாடு.

    "இந்தியர்களாகிய நாங்கள்" என்கிற மகத்தான சொற்களோடு துவங்கும் அரசியல் சாசனத்தின் முகவுரையை இன்றைய நாளில் மறுபடியும் நினைவுகூறுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×