search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அவதூறு வழக்கு- பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
    X

    அவதூறு வழக்கு- பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

    • திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
    • வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திமுக எம்பியும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என வினோஜ் பி.செல்வம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி, வினோஜ் பி.செல்வம் சமூக வலைளத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் கருத்து பதவிட்டதாக தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×