என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் தொடர் மழை: மேட்டூரில் அதிகபட்சமாக 43.8 மி.மீ. மழை கொட்டியது
    X

    சேலத்தில் தொடர் மழை: மேட்டூரில் அதிகபட்சமாக 43.8 மி.மீ. மழை கொட்டியது

    • தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
    • சேலம் மாநகரில் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை லேசான சாரல் மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேட்டூர், எடப்பாடி, கெங்கவல்லி பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. மேட்டூரில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.

    இதே போல எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு மேல் தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது . பின்னர் விடிய விடிய தூறலாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 1.30 மணியளவில் தொடங்கிய மழை 2.30 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாநகரில் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை லேசான சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 43.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடியில் 30.2, கெங்கவல்லியில் 14, ஓமலூர் 8.6, ஏற்காடு 4.4, சேலம் 1.6, சங்ககிரி 1.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 103.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×