என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவை கார் குண்டுவெடிப்பு- கைதானவர்களை 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி
- இறந்தவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
- கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 29) உடல் கருகி பலியானார். கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும்.
இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பெற வேண்டியிருப்பதால் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது.
அதன்படி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்