என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருவண்ணாமலை வருகை
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருவண்ணாமலை வருகை

    • நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார்.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை:

    2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார். அப்போது அவர் அண்ணா நுழைவு வாயில், கருணாநிதி திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

    திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார். நாளை காலை அவர் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார். அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் காலை சுமார் 11 மணிக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பின்னர் அவர் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து அன்று மாலை சுமார் 6 மணியளவில் திருவண்ணாமலை மாட வீதி பெரியத் தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து மாலை 7 மணியளவில் திருவண்ணாமலை-வேலூர் செல்லும் சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (9-ந் தேதி) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    சாலைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் சாலைகளில் கட்சி கொடிகளும் கட்டப்பட்டு வருகிறது.

    விழா நடைபெறும் பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    Next Story
    ×