search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா-சத்துள்ள உணவு கண்காட்சி
    X

    மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா-சத்துள்ள உணவு கண்காட்சி

    • விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.
    • மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் தூய்மை திருவிழா நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர் ஒன்றிணைந்து விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.

    தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் தேவையான சத்துள்ள உணவுகள் குறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×