search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையம்: புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் 19-ந்தேதி திறப்பு
    X

    சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையம்: புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் 19-ந்தேதி திறப்பு

    • சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
    • சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வரும் 19-ந்தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது.

    பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 19-ந்தேதி முதல் பொது பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

    மெட்ரோ பயணிகள் தங்களின் 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    Next Story
    ×