என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறுகிறது
- அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூருடன் முதலமைச்சர் செஸ் விளையாடினார்.
மாமல்லபுரம்:
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைப்பார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், 187 நாட்டு செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கவிருப்பதால், அவர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள? பார்வையாளர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார்.






