என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது
    X

    சென்னை குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது

    • சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டங்கள் வருகிற 11-ந் தேதி அனைத்து பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.
    • கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டங்கள் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர் கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Next Story
    ×