என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுராந்தகம் அருகே சென்னை அரசு பஸ்-வேன் மோதல்: 10 பேர் காயம்
- விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது.
- தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மதுராந்தகம்:
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று காலை 8.30 மணியளவில் அதிகாலை மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் முன்னாள் சென்று கொண்டு இருந்த டெம்போ வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் டெம்போ வேன் முன்னால் சென்ற சுற்றுலா பஸ்சின் பின்பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. டெம்போ வேனில் பயணம் செய்தவர்கள் மற்றும் பஸ் பயணிகள் என சுமார் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அரசு பஸ், டெம்போ வேன், சுற்றுலா பஸ் என 3 வாகனங்களும் அடுத்தடுத்து சாலையின் குறுக்கே நின்றன. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது. விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






