search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா பிறந்தநாளையொட்டி 14-ந்தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம்: சென்னை மாநகராட்சி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அண்ணா பிறந்தநாளையொட்டி 14-ந்தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம்: சென்னை மாநகராட்சி

    • போட்டியில் பங்கு பெறும் மாணவ-மாணவியர்கள் தன் சொந்த சைக்கிள் மற்றும் தலைக்கவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
    • போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந்தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் பந்தயம் 14-ந்தேதி காலை 6 மணியளவில் சென்னை தீவுத்திடலில் தொடங்கி, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், நேப்பியர் பாலம், காயிதே-இ-மில்லத் பாலம் இடது புறம் அண்ணாசாலை வழியாகச் சென்று மீண்டும் தீவுத்திடலில் தொடங்கிய இடத்திலேயே முடிக்கப்படும்.

    இந்த போட்டியில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறலாம். மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசும், தகுதிச்சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.

    போட்டியில் பங்கு பெறும் மாணவ-மாணவியர்கள் தன் சொந்த சைக்கிள் மற்றும் தலைக்கவசத்துடன் கலந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் வயது சான்றிதழுடன் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவை கொண்டு 13-ந் தேதி வரை சென்னை-3, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.

    போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும், 14-ந்தேதி காலை 5.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முன் ஆஜராக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-26644794, 7401703480 மற்றும் 7338980191 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×