search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.ஏ.எஸ். பதவிக்கு 3 அதிகாரிகள் நியமனம்- மத்திய அரசு உத்தரவு
    X

    ஐ.ஏ.எஸ். பதவிக்கு 3 அதிகாரிகள் நியமனம்- மத்திய அரசு உத்தரவு

    • வி.ஆர்.சுப்புலட்சுமி, பி.ரத்னசாமி, ஆர்.அழகுமீனா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி, தமிழக அரசுப் பணியில் நியமிக்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
    • வி.ஆர்.சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 10.1.1980 அன்று பிறந்த அவர் தமிழக அரசுப் பணியில் 2009-ம் ஆண்டு சேர்ந்தார்.

    சென்னை:

    மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1.1.2021 முதல் 31.12.2021 வரை தமிழக அரசுப் பணியில் ஏற்பட்ட ஐ.ஏ.எஸ். பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 3 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அந்த வகையில் வி.ஆர்.சுப்புலட்சுமி, பி.ரத்னசாமி, ஆர்.அழகுமீனா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி, தமிழக அரசுப் பணியில் நியமிக்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வி.ஆர்.சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 10.1.1980 அன்று பிறந்த அவர் தமிழக அரசுப் பணியில் 2009-ம் ஆண்டு சேர்ந்தார். வருவாய்த் துறையில் பணியாற்றியுள்ளார்.

    7.1.1973 அன்று பிறந்த பி.ரத்னசாமி சிப்காட் நிறுவனத்தின் பொது மேலாளராகவும்; ஆர்.அழகுமீனா, தேசிய சுகாதார இயக்க மாநில திட்ட மேலாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

    Next Story
    ×