search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    • கைது நடவடிக்கை மீனவர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    • தமிழக மீனவர்களின் உரிமையையும்; வாழ்வாதாரத்தையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்ககடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்து ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை சிறைப் பிடித்துள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது. கச்சதீவிற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 மீனவர்களை கைது செய்தும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மேலும் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 11 மீனவர்களையும் கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மீனவர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமையையும்; வாழ்வாதாரத்தையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×