search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறாத வடுக்களாக வாட்டுகிறது: நாளை 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்
    X

    ஆறாத வடுக்களாக வாட்டுகிறது: நாளை 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்

    • சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது.
    • கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சென்னை கடலோர பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆறாத வடுக்களாகவே பொதுமக்களை வாட்டுகிறது. சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது.

    சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நாளை (26-ந்தேதி) கடற்கரை பகுதிகளில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையடுத்து நாளை கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    Next Story
    ×