search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.35 அடியானது
    X

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.35 அடியானது

    • பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை கொட்டியது.

    இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அணைக்கு 24 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நேற்று 2 ஆயிரத்து 500 கன தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது மேலும் குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1944 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 99.35 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு 800 கனஅடியும், குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை 100 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் அதிகாரிகள் அணையின் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×