என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் ராமர் கோவில் அழைப்பிதழ் 90 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்பட்டது
- தமிழ்நாட்டில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் வழங்க திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பினர் வழங்கி வருகிறார்கள்.
- மீதம் உள்ள 10 லட்சம் வீடுகளுக்கும் வருகிற 20-ந் தேதிக்குள் வழங்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் வீடு வீடாக சென்று அழைப்பிதழ்கள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் வழங்க திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பினர் வழங்கி வருகிறார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ராமர் படம், அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள். கடந்த 15-ந் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை 90 லட்சம் வீடுகளுக்கு மட்டும் வழங்கி உள்ளார்கள்.
எனவே மீதம் உள்ள 10 லட்சம் வீடுகளுக்கும் வருகிற 20-ந் தேதிக்குள் வழங்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஊர்வலம் போல் செல்லுதல், வாத்தியங்கள் முழங்க செல்லுதல், ஆஞ்சநேயர் வேடத்துடன் செல்வது என்று விதவிதமாக செல்கிறார்கள்.






