என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

    • தீபாவளி பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
    • உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.

    உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×