search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
    X

    மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

    • தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை:

    மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

    Next Story
    ×