search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக சின்னம், பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது- ஈபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு
    X

    அதிமுக சின்னம், பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது- ஈபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு

    • கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம்.
    • தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் என்னை அங்கீகரித்துள்ளது.

    அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், அஇஅதிமுக பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்க வேண்டும்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாக மனுவில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

    என்னை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்றும் ஈபிஎஸ் கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×