என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

மத்திய உளவுத்துறை ஊழியர் கார் மோதி பலி

- திருவேற்காடு நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31). மத்திய உளவுத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வைஷாலி. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நேற்று மாலை மனோஜ்குமார், தனது நண்பர் ஒருவரது குடும்ப விழாவில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். பருத்திப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவடியில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே காரில் இருந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். விபத்து பற்றி அறிந்ததும் ஆவடி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பலியான மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
