search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் 54 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் 54 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர்

    • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.

    வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் மற்றும் விசைத்தறி பயன்பாட்டாளர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது.

    இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    ஆதார் எண் நகல், அதில் உள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்து சென்றால் போதுமானது. மின்சார அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று வரை 54 லட்சத்து 55 ஆயிரம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2811 சிறப்பு கவுண்டர்கள் மூலம் 83 ஆயிரமும், ஆன்லைன் வழியாக 1.55 லட்சமும் இணைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் 54 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×