search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 500 இடங்களில் பா.ஜனதாவினர் தூய்மைப்பணி: பள்ளி, பூங்காக்கள், தெருக்களை சுத்தம் செய்தார்கள்
    X

    சென்னையில் 500 இடங்களில் பா.ஜனதாவினர் தூய்மைப்பணி: பள்ளி, பூங்காக்கள், தெருக்களை சுத்தம் செய்தார்கள்

    • பூங்காக்கள், தெருக்கள், பள்ளிகள், கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்தார்கள்.
    • ஈக்காட்டுதாங்கலில் பள்ளி வளாகத்தை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் சுத்தப்படுத்தினார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டப்படி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அனைவரும் தூய்மை பணிகளில் ஈடுபடும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

    இதை பா.ஜனதாவினர் அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டனர். சென்னையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது.

    பூங்காக்கள், தெருக்கள், பள்ளிகள், கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்தார்கள். பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

    மடிப்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் பூங்கா, அம்பத்தூர் பகுதிகளில் நடந்த பணிகளில் துணைத்தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்றார்.

    அண்ணா நகரில் மாவட்ட தலைவர் தனசேகர், மகளிரணி லதா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநில செயலாளர் சதீஷ் தலைமையில் திரு.வி.க. நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்.

    ஈக்காட்டுதாங்கலில் பள்ளி வளாகத்தை மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் சுத்தப்படுத்தினார்கள்.

    இதே போல் நகரம் முழுவதும் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

    Next Story
    ×