என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மறைந்த காங்கிரஸ் நிர்வாகி எழுதிய 2வது கடிதம்- காவல்துறை விளக்கம்
    X

    மறைந்த காங்கிரஸ் நிர்வாகி எழுதிய 2வது கடிதம்- காவல்துறை விளக்கம்

    • விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.
    • ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

    ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதங்கள் வெளியான நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    புகார் அளித்த கடந்த 3ம் தேதி அன்றே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.

    ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சடலமாக மீட்கப்பட்டதால், இயற்கைக்கு மாறான மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×