search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும்- திருப்பூர் கலெக்டர்
    X

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும்- திருப்பூர் கலெக்டர்

    • அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 3-வது முறையாக மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    திருப்பூர்:

    பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும், உயர்கல்வியை தொடர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். இதுபோல் 95.75 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு பள்ளிகள் அளவிலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 3-வது முறையாக மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×