search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு
    X
    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு

    கன்னியாகுமரியில் 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

    கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் அடிக்கடி தாழ்ந்து உள்வாங்கி வருவதால் படகு போக்குவரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து பகல் 11 மணிக்கு பிறகே தொடங்கப்பட்டது.

    இன்றும் (வியாழக்கிழமை) 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு பலகை படகுத்துறை நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நுழைவுவாயில் முன்பு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    Next Story
    ×