என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களை காணலாம்.
மணமேல்குடி அருகே கடலுக்கு சென்று மாயமான 4 மீனவர்கள் மீட்பு
மணமேல்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டதால் சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமாரராஜா (வயது 44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), ராஜ் (30) ஆகிய 4 மீனவர்கள், 4 நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க நேற்று காலை நாட்டுப்படகில் சென்றனர்.
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சக மீனவர்களின் உதவியோடு 2 படகுகளில் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
அங்கு வலை விரித்திருந்த பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை காணாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர் சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
நேற்று காலை முதலே கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், நான்கு மீனவர்களும் காற்றின் வேகத்தில் வேறு எங்காவது இழுத்துச் செல்லப்பட்டனரா, அல்லது படகின் எந்திரம் பழுதாகி எங்காவது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா? என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்ததை கடலோர காவல் படையினர் பார்த்தனர். பின்னர் உடனடியாக அருகில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களை கரைக்கு கொண்டு வரப்பட்டனர். படகு பழுது காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 20 மணி நேரமாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது தெரியவந்தது.
மீட்கப்பட்ட மீனவர்களில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டதால் சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் குமாரராஜா (வயது 44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), ராஜ் (30) ஆகிய 4 மீனவர்கள், 4 நாட்களுக்கு முன்பு கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க நேற்று காலை நாட்டுப்படகில் சென்றனர்.
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சக மீனவர்களின் உதவியோடு 2 படகுகளில் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
அங்கு வலை விரித்திருந்த பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை காணாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர் சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றனர்.
நேற்று காலை முதலே கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், நான்கு மீனவர்களும் காற்றின் வேகத்தில் வேறு எங்காவது இழுத்துச் செல்லப்பட்டனரா, அல்லது படகின் எந்திரம் பழுதாகி எங்காவது நடுக்கடலில் தத்தளிக்கின்றனரா? என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்ததை கடலோர காவல் படையினர் பார்த்தனர். பின்னர் உடனடியாக அருகில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களை கரைக்கு கொண்டு வரப்பட்டனர். படகு பழுது காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 20 மணி நேரமாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது தெரியவந்தது.
மீட்கப்பட்ட மீனவர்களில் குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டதால் சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர்.
Next Story






