என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிளாஸ்டிக்கு மாற்றாக அறிமுகம்- நீலகிரியில் கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் தண்ணீர்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலை பிரதேசமாக உள்ளது. இதன் காரணமாக இந்த காட்சிகளை கண்டுகளிக்க குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை திறந்த வெளி மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வது வாடிக்கையாக இருந்தது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உருவானதுடன், வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.
மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காக்கவும் மாவட்டம் நிர்வாகம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.
தடையை மீறி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா என்பதும் குறித்தும் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே பிளாஸ்டிக் மற்றும் காலி மது பாட்டில்களை திறந்த வெளியில் தூக்கி எறியாமல் இருக்க மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சேகரிப்பு மையங்களும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது.
ஒரு பாட்டில் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து காலி கண்ணாடி பாட்டில்களை கடையில் திருப்பி வழங்கினால் ரூ.30 வரை தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊட்டி, குன்னூர் பகுதியில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தி விட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அதிமாக வீசி செல்கின்றனர். வனம் மற்றும் விவசாய நிலத்தில் தூக்கி எறிவதால் உடைந்து காணப்படுகிறது. எனவே கண்ணாடி பாட்டில்களை பொது இடத்தில் தூக்கி வீசுவதை தடுக்க சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்