என் மலர்
தமிழ்நாடு

மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனாலும் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று வினாடிக்கு ஆயிரத்து 724 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து ஆயிரத்து 735 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது . அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனாலும் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று 105.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105.52 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறைந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று வினாடிக்கு ஆயிரத்து 724 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து ஆயிரத்து 735 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது . அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனாலும் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று 105.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105.52 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறைந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
Next Story