என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இலங்கை சிறையில் இருந்து மண்டபம் மீனவர்கள் 4 பேர் இன்று விடுதலை
Byமாலை மலர்22 April 2022 5:29 AM GMT (Updated: 22 April 2022 5:29 AM GMT)
விசைப்படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி விசைப்படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டுமென இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம்:
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் 4 பேரும் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு தொடர்பாக இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 3 முறை ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரும், 4-வது முறையாக இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
விசைப்படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி விசைப்படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் 4 பேரும் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு தொடர்பாக இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 3 முறை ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரும், 4-வது முறையாக இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
விசைப்படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி விசைப்படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X