என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திட்டக்குடியில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்- பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் திட்டக்குடி அரசு பஸ் டெப்போவில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை சுமார் 40-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்காமல் நிறுத்திவிட்டனர்.
திட்டக்குடி:
கள்ளக்குறிச்சியில் இருந்து திட்டக்குடிக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. வழியில் தொழுதூர் அருகே உள்ள ஆ.பாளையம் என்ற இடத்தில் வந்தபோது அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா ஊர்வலம் சாலையில் சென்றது. எதிர்பாராதவிதமாக சாமி ஊர்வலத்தில் பஸ் புகுந்தது. இதில் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்ட சாமி சிலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த சில இளைஞர்கள் அரசு பஸ்சின் டிரைவர் பெரியசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் திட்டக்குடி அரசு பஸ் டெப்போவில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை சுமார் 40-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்காமல் நிறுத்திவிட்டனர். டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திட்டக்குடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என்று பொதுமக்கள் பலரும் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகினர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் அரசு பஸ் டெப்போ மேலாளர் மாரியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் டிரைவரை தாக்கியவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து சிலமணிநேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன.
திடீரென இன்று காலை அரசு பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சியில் இருந்து திட்டக்குடிக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. வழியில் தொழுதூர் அருகே உள்ள ஆ.பாளையம் என்ற இடத்தில் வந்தபோது அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா ஊர்வலம் சாலையில் சென்றது. எதிர்பாராதவிதமாக சாமி ஊர்வலத்தில் பஸ் புகுந்தது. இதில் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்ட சாமி சிலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த சில இளைஞர்கள் அரசு பஸ்சின் டிரைவர் பெரியசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் திட்டக்குடி அரசு பஸ் டெப்போவில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை சுமார் 40-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்காமல் நிறுத்திவிட்டனர். டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திட்டக்குடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என்று பொதுமக்கள் பலரும் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகினர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் அரசு பஸ் டெப்போ மேலாளர் மாரியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் டிரைவரை தாக்கியவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து சிலமணிநேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன.
திடீரென இன்று காலை அரசு பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






