search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெல்லையில் வி‌ஷம் குடித்த தாய்-மகள் பரிதாப பலி

    நெல்லையில் குடும்ப தகராறில் தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனியார் காற்றாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது38).

    இவர் நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் காலை மாடசாமி பணிக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது சுமதி மற்றும் அவர்களது மகள் சுபா ராஜேஸ்வரி (8) ஆகியோர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாடசாமி தனது மனைவி மற்றும் மகளை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிறுமி சுபா ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் சுமதியும் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாடசாமியின் சகோதரர் சமீபத்தில் இறந்து விட்டார். அதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு சில செலவுகளை மாடசாமி செய்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சுமதி தனது மகள்கள் 2 பேருக்கும் வி‌ஷம் கொடுக்க முயன்றுள்ளார்.

    ஆனால் மூத்த மகள் அதனை குடிக்க மறுத்து வெளியே ஓடிவிட்டார். தொடர்ந்து சுபா ராஜேஸ்வரிக்கு வி‌ஷத்தை கொடுத்து சுமதியும் குடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    Next Story
    ×