என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சத்தியமங்கலம் அருகே இன்று 108 ஆம்புலன்சில் கூலித்தொழிலாளி மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியான சிவகாமிக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதனை அடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் அங்கு வந்து சிவகாமியை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு பிரசவத்திற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.சிவகாமி கணவரும் உடனிருந்தார்.
ஆம்புலன்ஸ் கெம்பநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.நிலைமையை புரிந்துகொண்ட கடம்பூர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிவகாமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது சிவகாமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அஜித் குமார் மற்றும் வாகன ஓட்டுனர் அரப்புலி சாமியை பொதுமக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்