என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு
Byமாலை மலர்31 March 2022 3:55 AM GMT (Updated: 31 March 2022 3:55 AM GMT)
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.
உடனே அச்சமடைந்த மீனவர்கள் கடற்படையினருக்கு பயந்து வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். அதில் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த மீன வர்களான ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 38), கலைமாறன் (29), விஸ்வலிங்கம் (50) ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் விசுவலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் படகுடன் மீனவர்களை இலங்கையில் உள்ள மயிலட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் புதுக்கோட்டை மீன வர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது பிற்பகலில் தெரியவரும்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடந்த 28-ந்தேதிதான் மீண்டும் கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று மீன்பிடி கொள்கை உள்ளிட்டவை குறித்து அந்நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது.
உடனே அச்சமடைந்த மீனவர்கள் கடற்படையினருக்கு பயந்து வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். அதில் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த மீன வர்களான ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 38), கலைமாறன் (29), விஸ்வலிங்கம் (50) ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் விசுவலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் படகுடன் மீனவர்களை இலங்கையில் உள்ள மயிலட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் புதுக்கோட்டை மீன வர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது பிற்பகலில் தெரியவரும்.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு கடந்த 28-ந்தேதிதான் மீண்டும் கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று மீன்பிடி கொள்கை உள்ளிட்டவை குறித்து அந்நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X