என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி பார்கவியுடன் பெற்றோர்.
    X
    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி பார்கவியுடன் பெற்றோர்.

    மருத்துவ படிப்பை முழுமையாக முடிக்க தமிழக அரசு வழிகாட்ட வேண்டும்- உக்ரைனில் இருந்து வந்த மாணவி பேட்டி

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர் நடக்கும்போது வகுப்புகள் வழக்கம் போல் நடந்து வந்தன.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சமூக சேவை ஆற்றும் செர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் செர்டு பாண்டி, இவரது மனைவி போதும் பொண்ணு. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களும் உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

    மூத்தமகள் படித்து முடித்து தற்போது பயிற்சி பெற்று வருகிறார். 2-வது மகள் பார்கவி உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரத்தில் உள்ள நேசனல் மெடிக்கல் யுனிவர் சிட்டியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர் கூறியதாவது:-

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர் நடக்கும்போது வகுப்புகள் வழக்கம் போல் நடந்து வந்தன. திடீரென்று ஒரு நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் இனிமேல் வகுப்புகள் நடைபெறாது. பாதுகாப்பான பகுதியில் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    ஏ.டி.எம். செயல்படவில்லை. பிரட் மட்டும் கிடைத்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வருவதற்கு ரூ.30 ஆயிரம் கார் வாடகை கொடுத்து வந்தோம். ரெயில் நிலையத்தில் இருக்கையை பிடித்து கொடுக்க ரூ.60 ஆயிரம் கேட்டார்கள். பின் தூதரகத்தில் கிளிய ரன்ஸ் சான்றிதழ் பெற நாள் கணக்கில் காத்து கிடந்தோம்.அதன்பின் போலந்து விமான நிலையத்திலிருந்து இந்தியா திரும்பினேன்.

    உக்ரைனில் இருந்து கட்டணமின்றி அழைத்து வந்ததற்கு பிரதமருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைன் நாட்டில் போர் பதட்டத்தில் குண்டுமழைகளுக்கு மத்தியில் பரிதவித்து நின்ற தமிழ்மாணவர்களோடு பேசி தைரியம் ஏற்படுத்தியது மறக்கமுடியாத நன்றி நிகழ்வாகும்.

    மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெடிகுண்டு வீசியதால் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகிவிட்டது.ரெயிலில் வந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு புகையை பார்த்தோம். லட்சம் லட்சமாக செலவு செய்து பெற்றோர் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு போர் காரணமாக படிப்பை முடிக்காமல் பாதியிலேயே திரும்பி உள்ளோம். முழுமையடையாமால் உள்ளோம். படிப்பை முழுமையாக முடிக்க மத்திய, மாநில அரசுகள் வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×