என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீராணம் ஏரி
வீராணம் ஏரி நீர்மட்டம் சரிவு
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்துமுடிந்துள்ளது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை, பருவகாலங்களில் பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்துமுடிந்துள்ளது. தற்போது உளுந்து சாகுபடி செய்து உள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. எனவே வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது இந்த தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 211 கனஅடி மட்டுமே வந்தது. ஏரியின் நீர்மட்டம் 43.95 அடியாக உள்ளது. நேற்று 44.10 அடியாக இருந்தது. வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக இன்று 63 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 39 அடி நீர் மட்டம் இருக்கும் வரைதான் தண்ணீர் அனுப்ப முடியும். அதற்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டால் குடிநீர் அனுப்ப முடியாது. எனவே கோடை மழை பெய்தால்தான் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பமுடியும் என்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை, பருவகாலங்களில் பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை நடந்துமுடிந்துள்ளது. தற்போது உளுந்து சாகுபடி செய்து உள்ளனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. எனவே வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது இந்த தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 211 கனஅடி மட்டுமே வந்தது. ஏரியின் நீர்மட்டம் 43.95 அடியாக உள்ளது. நேற்று 44.10 அடியாக இருந்தது. வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக இன்று 63 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 39 அடி நீர் மட்டம் இருக்கும் வரைதான் தண்ணீர் அனுப்ப முடியும். அதற்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டால் குடிநீர் அனுப்ப முடியாது. எனவே கோடை மழை பெய்தால்தான் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பமுடியும் என்றனர்.
Next Story






