search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியது

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 42 நாட்கள் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடித்த நிலையில் டிசம்பர் மாதம் 25-ந் தேதி அணையின் நீர்மட்டம் 119.64 அடியானது.

    கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் 31-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடிக்கும் குறையாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் டெல்டா பகுதிக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் வழக்கம் போல 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 116.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 116.21 அடியாக சரிந்தது. பிற்பகலில் நீர்மட்டம் மேலும் குறைந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×