search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பனிப்பொழிவு காரணமாக பயிர்களில் உறைபனி படர்ந்து இருப்பதை காணலாம்
    X
    பனிப்பொழிவு காரணமாக பயிர்களில் உறைபனி படர்ந்து இருப்பதை காணலாம்

    ஊட்டியில் கொட்டி தீர்க்கும் கடும் உறைபனி: மக்கள்-வாகன ஓட்டிகள் அவதி

    ஊட்டியில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் உறைபனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது.

    மேலும் கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது, இதனால் வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பகல் நேரத்திலேயே சாலை ஓரங்களில் தீ மூட்டி குளிர்காயும் சூழல் ஏற்பட்டுள்ளது

    ஊட்டியில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் கடும் உறைபனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இன்று உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

    நேற்று மாலை ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது. இதனையடுத்து இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது. உதகை தாவரவியல் பூங்காவில் கொட்டிய உறைபனியால் புல்வெளி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. அதே போல காந்தல் மைதானம், தலைகுந்தா புல்வெளி என நகரின் அனைத்து பகுதிகளிலும் பனிப்போர்வையை பார்க்க முடிந்தது.

    கை கால்கள் விரைத்து போகும் நிலை உள்ளதால் காலை வேளையில் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 10 மணிக்கு நல்லவெயில் இருந்த போதும் கடுமையான குளிர் வாட்டுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×