
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நீலகிரி மாவட்ட த்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை. பெரும்பாலான தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் மாலையே நடத்தப்பட்டது.
அதேபோல, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சிறப்பு ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இன்று காலை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் வழக்கம்போல் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.