என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளியும் விலை போனது
Byமாலை மலர்2 Dec 2021 2:45 AM GMT (Updated: 2 Dec 2021 2:45 AM GMT)
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில்தான் தக்காளி விலை சற்று குறையும் என்றும், அதுவரை இதுபோல் ஏற்ற, இறக்கத்துடனேயே விலை நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை :
வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. பின்னர் சற்று விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிலோ ரூ.140 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த 25-ந்தேதி ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை ஆனது.
அதற்கு மறுநாள் மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.60-க்கும், அதனைத் தொடர்ந்து மீண்டும் விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்து, முதல் ரக தக்காளி ரூ.70-க்கும், கடைசி ரக தக்காளி ஒரு கிலோ ரூ.55-க்கும் விற்பனை ஆனது.
பொதுவாக தக்காளி உடைந்து போனாலோ அல்லது கீறல் விட்டு இருந்தாலோ அதை வியாபாரிகளோ, பொதுமக்களோ வாங்க சற்று தயக்கம் காட்டுவார்கள். ஆனால் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளி கூட நல்ல விலைக்கு போனதாக கூறப்படுகிறது. உடைந்த, கீறல் விட்டு இருந்த, நசுங்கி காணப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில்தான் தக்காளி விலை சற்று குறையும் என்றும், அதுவரை இதுபோல் ஏற்ற, இறக்கத்துடனேயே விலை நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. பின்னர் சற்று விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிலோ ரூ.140 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த 25-ந்தேதி ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை ஆனது.
அதற்கு மறுநாள் மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.60-க்கும், அதனைத் தொடர்ந்து மீண்டும் விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்து, முதல் ரக தக்காளி ரூ.70-க்கும், கடைசி ரக தக்காளி ஒரு கிலோ ரூ.55-க்கும் விற்பனை ஆனது.
பொதுவாக தக்காளி உடைந்து போனாலோ அல்லது கீறல் விட்டு இருந்தாலோ அதை வியாபாரிகளோ, பொதுமக்களோ வாங்க சற்று தயக்கம் காட்டுவார்கள். ஆனால் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உடைந்த தக்காளி கூட நல்ல விலைக்கு போனதாக கூறப்படுகிறது. உடைந்த, கீறல் விட்டு இருந்த, நசுங்கி காணப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிக்கும் பட்சத்தில்தான் தக்காளி விலை சற்று குறையும் என்றும், அதுவரை இதுபோல் ஏற்ற, இறக்கத்துடனேயே விலை நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X