என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நீப்பத்துறை சென்னியம்மன் பாறை கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.
சாத்தனூர் அணையில் இருந்து 44,561 கன அடி வெள்ளம் சீறிப் பாய்கிறது
By
மாலை மலர்20 Nov 2021 4:38 AM GMT (Updated: 20 Nov 2021 4:38 AM GMT)

ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் மற்றும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 44,561 கனஅடி தண்ணீர் வருகிறது. புதிய ஷட்டர்கள் பொருத்துவற்காக, பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டதால், தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.
நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பண்ணையாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள், பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
செண்பகத்தோப்பு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர், குப்பநத்தம் அணையிலிருந்து 2700 கன அடி, மிருகண்டா நதியிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாறு, கமண்டல நாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, 800-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளன.
30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் தாழ்வானப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
ஏரிகள் மற்றும் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், பிரதான சாலைகளை ஆர்ப்பரித்து கடந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில், சமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறி ஓலையாற்றில் செல்லும் தண்ணீரானது ஏந்தல் கிராமத்தை சூழ்ந்துள்ளது.
மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், கார்-வேன் உள்ளிட்ட வாகனங்கள், பைக் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் மற்றும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 44,561 கனஅடி தண்ணீர் வருகிறது. புதிய ஷட்டர்கள் பொருத்துவற்காக, பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டதால், தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.
நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பண்ணையாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள், பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
செண்பகத்தோப்பு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர், குப்பநத்தம் அணையிலிருந்து 2700 கன அடி, மிருகண்டா நதியிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாறு, கமண்டல நாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, 800-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளன.
30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் தாழ்வானப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
ஏரிகள் மற்றும் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், பிரதான சாலைகளை ஆர்ப்பரித்து கடந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில், சமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறி ஓலையாற்றில் செல்லும் தண்ணீரானது ஏந்தல் கிராமத்தை சூழ்ந்துள்ளது.
மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், கார்-வேன் உள்ளிட்ட வாகனங்கள், பைக் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
