என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் வாழை இலை விலை இரு மடங்கு உயர்வு
Byமாலை மலர்16 Nov 2021 5:25 AM GMT (Updated: 16 Nov 2021 5:25 AM GMT)
தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
தூத்துக்குடி:
குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வாழை இலைகள் அதிக அளவில் வரும். 2 மாவட்டங்களிலும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வந்து சேரும் இந்த வாழை இலை கட்டுகளை வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மழைநீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து சேரும் வாழைகட்டுகள் வரவில்லை. வழக்கமாக 500 கட்டுகள் வரை வாழைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வரும். ஆனால் மழையால் கடந்த 3 நாட்களாக 150 முதல் 200 கட்டுகளே வருகின்றன. வரத்து பாதியாக குறைந்ததால் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாழை இலை முக்கிய இடம் பிடிப்பதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட்டில் இன்று காலை 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X