என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
Byமாலை மலர்26 Oct 2021 7:53 AM GMT (Updated: 28 Oct 2021 10:14 AM GMT)
2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்ற மலர்களை கண்டு ரசிப்பது போல், குறிஞ்சி மலர்களையும் கண்டு ரசிக்கின்றனர்.
ஊட்டி:
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தாலியன் பூங்காவில் இயற்கையாக அமைந்து உள்ள பாறையில் நீர்வீழ்ச்சி போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல்பகுதியில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன.
தற்போது அந்த செடிகளில் குறிஞ்சி மலர்கள் நீல நிறத்தில் பூத்துக்குலுங்குகின்றன. ஸ்ட்ரோபிலாந்தஸ் சோசிபினஸ் என்ற வகையை சேர்ந்த குறிஞ்சி செடிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையது. அதன்படி பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகிறது.
2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்ற மலர்களை கண்டு ரசிப்பது போல், குறிஞ்சி மலர்களையும் கண்டு ரசிக்கின்றனர். மேலும் இதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இது பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தாலியன் பூங்காவில் இயற்கையாக அமைந்து உள்ள பாறையில் நீர்வீழ்ச்சி போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல்பகுதியில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன.
தற்போது அந்த செடிகளில் குறிஞ்சி மலர்கள் நீல நிறத்தில் பூத்துக்குலுங்குகின்றன. ஸ்ட்ரோபிலாந்தஸ் சோசிபினஸ் என்ற வகையை சேர்ந்த குறிஞ்சி செடிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையது. அதன்படி பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகிறது.
2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்ற மலர்களை கண்டு ரசிப்பது போல், குறிஞ்சி மலர்களையும் கண்டு ரசிக்கின்றனர். மேலும் இதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இது பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X