search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுந்தரராஜன் அய்யர்
    X
    சுந்தரராஜன் அய்யர்

    கேரளா வெள்ளம், நிலச்சரிவை முன்கூட்டியே கணித்த ஆற்காடு பஞ்சாங்கம்

    கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். 2 நாட்கள் மின்சார வசதி இல்லாமல் தவிக்க நேரும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    ஆற்காடு பஞ்சாங்கத்தை கணிதர் சுந்தரராஜன் அய்யர் கணித்து எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளபடி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். 2 நாட்கள் மின்சார வசதி இல்லாமல் தவிக்க நேரும் என்று பஞ்சாங்கத்தில் கூறியுள்ளார்.

    அதன்படி கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்துள்ளது.

    ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்துள்ளபடி பல நிகழ்வுகள் நடந்துள்ளது. விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கும். தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் நிலையான நிலையில் இருக்காது.

    அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பிரச்சனை தீரும். கடல் உள்வாங்கும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அனைத்தும் நடந்துள்ளது.

    Next Story
    ×