search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா கைது

    தேன்கனிக்கோட்டைஅருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே பேடரஅள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி.

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது21).

    இந்த நிலையில் கேசவன் உறவினர் என்பதால் அடிக்கடி அந்த சிறுமி வீட்டிற்கு சென்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சிறுமியும், கேசவனும் நெருங்கி பழகினர்.

    கேசவன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட அந்தசிறுமி அவருடன் பல இடங்களில் ஊர் சுற்றியுள்ளார். அப்போது கேசவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து கடந்த மே மாதம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் சிறுமியை பெற்றோரை தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் விசாரித்து கேசவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    கேசவன் அந்த சிறுமிக்கு சித்தப்பா உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய கேசவனின் உறவினர்கள் சூர்யா என்கிற அழகேசன், பச்சமுத்து (25), ஆனந்தன் (28), பச்சியப்பன் (32), கிருஷ்ணன் (30) ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான 6 பேரையும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தில் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×