என் மலர்
செய்திகள்

விபத்து
நெய்வேலி அருகே கார் மீது லாரி மோதல்: வங்கி அதிகாரி-உதவியாளர் பலி
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மந்தாரக்குப்பம்:
மதுரையை சேர்ந்தவர் அஜய் (வயது 35). இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
அதே வங்கியில் அலுவலக உதவியாளராக மந்தாரக்குப்பத்தை சேர்ந்த ரகுவரன் (30) என்பவரும் வேலை பார்த்து வந்தார். ரகுவரனின் மனைவி உடல்நிலை குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து ரகுவரனின் மனைவி சிகிச்சை தொடர்பாக டாக்டரிடம் கேட்பதற்காக அஜய், ரகுவரன் மற்றும் அவரது தம்பி ரங்கராஜன் (32) ஆகிய 3 பேரும் ஒரு காரில் புதுவைக்கு சென்றனர். புதுவையில் டாக்டரை சந்தித்து விட்டு அவர்கள் மந்தாரக்குப்பத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை அஜய் ஓட்டினார்.
அந்த கார் நள்ளிரவில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் சேப்ளா நத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியும் அஜய் ஓட்டிவந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு- நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் இருந்த அஜய் மற்றும் ரகுவரன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரங்கராஜன் இடிபாடுக்குள் சிக்கி 2 கால்களும் துண்டித்த நிலையில் உயிருக்கு போராடினார்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்தில் 2 கால்களையும் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரங்கராஜனை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான அஜய், ரகுவரன் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான அஜய்க்கு திருமணமாகி 1½ வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரையை சேர்ந்தவர் அஜய் (வயது 35). இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
அதே வங்கியில் அலுவலக உதவியாளராக மந்தாரக்குப்பத்தை சேர்ந்த ரகுவரன் (30) என்பவரும் வேலை பார்த்து வந்தார். ரகுவரனின் மனைவி உடல்நிலை குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து ரகுவரனின் மனைவி சிகிச்சை தொடர்பாக டாக்டரிடம் கேட்பதற்காக அஜய், ரகுவரன் மற்றும் அவரது தம்பி ரங்கராஜன் (32) ஆகிய 3 பேரும் ஒரு காரில் புதுவைக்கு சென்றனர். புதுவையில் டாக்டரை சந்தித்து விட்டு அவர்கள் மந்தாரக்குப்பத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை அஜய் ஓட்டினார்.
அந்த கார் நள்ளிரவில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் சேப்ளா நத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியும் அஜய் ஓட்டிவந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு- நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் இருந்த அஜய் மற்றும் ரகுவரன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரங்கராஜன் இடிபாடுக்குள் சிக்கி 2 கால்களும் துண்டித்த நிலையில் உயிருக்கு போராடினார்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்தில் 2 கால்களையும் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரங்கராஜனை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான அஜய், ரகுவரன் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான அஜய்க்கு திருமணமாகி 1½ வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story






