என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஓசூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர்- மனைவியை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், கக்கனூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அகில்குமார் (வயது67). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பிரீத்தி (60).

    இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டு மாடி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 3 மர்மநபர்கள், கணவன் -மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களின் கை. கால்களை கட்டிப்போட்டனர்.

    இதையடுத்து வீட்டின் அறையில் இருந்த, பீரோவை உடைத்து அதில் இருந்த 24 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியின் முனகல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கைகள் கட்டப்பட்ட நிலையில் கணவன்- மனைவி இருவரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து இருவரையும் மீட்டு, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்ளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற கொள்ளையர்கள் 3 பேரும் முகமூடி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் என்று தெரிகிறது.

    வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×