என் மலர்
செய்திகள்

கைது
ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நிலவரி திட்ட அலுவலகத்தில் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக வேல்முருகன், நில அளவை ஆய்வாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அலிமுல்லா என்பவர் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தார்.
இதையடுத்து அவர்கள் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அலிமுல்லா இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை அலிமுல்லாவிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் திடீரென மாலை 6 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து கையும் களவுமாக அவர்களை பிடித்தனர்.
பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அதிகாரிகள், ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் திடீர்சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 1மணிவரை நீடித்தது.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2பேரையும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 2பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்புபோலீசில் சிக்கிய தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக வேல்முருகன், நில அளவை ஆய்வாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அலிமுல்லா என்பவர் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தார்.
இதையடுத்து அவர்கள் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அலிமுல்லா இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை அலிமுல்லாவிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் திடீரென மாலை 6 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து கையும் களவுமாக அவர்களை பிடித்தனர்.
பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அதிகாரிகள், ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் திடீர்சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 1மணிவரை நீடித்தது.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2பேரையும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 2பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்புபோலீசில் சிக்கிய தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
Next Story






